எங்கள் பயணம் .
கடந்த வருடம் எங்கள் நிறுவனத்தின் முதல் சுற்றுலா தொடங்கியது. முதலில் சுற்றுலா செல்ல ஏற்ற நாட்களை தேர்வு செய்ததில் கோடை விடுமுறை நாட்களையே அனைவரும் விரும்பினர் . அடுத்து எங்கு செல்லலாம் என இன்டர்நெட்டில் தேடியதில் கேரளா மாநிலம் திருவனத்தபுரம் அருகே உள்ள பூவார் ஐஸ்லாந்து ரீசர்ட் தேர்வு செய்தோம். எங்கள் டூரில் மொத்தம் 50 நபர்கள் . இங்கு நான் ஒன்று சொல்ல கடமை பட்டுளேன் . இது எங்கள் முதல் சுற்றுலா எங்களை பற்றி முன் அறிமுகம் இல்லாத பல நண்பர்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைத்து கலந்து கொண்டனர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி . நங்கள் மே மாதம் சுற்றுலா செல்ல பிப்ரவரி மாதம் 50 நபர்களுக்கு முன் பதிவு செய்தோம் . முதல் நாள் மாலை அனைவரும் சரியான நேரத்திற்கு முன்பே சேலம் ரயில்நிலையம் வண்டு சேர்ந்தனர் . இரவு 8.00 மணிக்கு ரயில் புறப்பட்டது . இரவு சிற்றுண்டி ரயிலில் வழங்கினோம் . எங்களுடன் வந்த சில நண்பர்கள் சீட்டு விளையாடியும் நண்பர்களுடன் பேசிக்கொண்டும் எங்கள் இனிய பயணம் தொடங்கியது . இரண்டாம் நாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையம் சேர்ந்தோம் . அங்கு எங்களுக்கு அரை மணிநேரம் முன்பே எங்களுக்கான குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து ஓட்டுனர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார் .
பின்பு வழியில் ஒரு ஓட்டலில் டீ காபி அருந்திவிட்டு புத்துணர்வுடன் பூவார் சென்றோம் . அங்கு எங்களுக்காக போட் தயாராக இருந்தது
அங்கிருந்து ஒரு மணிநேர போட் பயணம் பூவார் என்ற இடம் முகத்துவாரம் பகுதியாகும் . சதுப்பு நிலம் ஆகும் இது தமிழ்நாட்டில் பிச்சாவரம் போன்ற பகுதியாகும். இந்த பகுதியில் போட் சவாரி செய்வது இனிமையான அனுபவம் ஆகும் . ஒரு மணி நேர பயணத்திற்கு பின் ரிசார்ட் சென்றோம் . அனைவருக்கும் ரூம் ஒதுக்கப்பட்டு key வழங்கப்பட்டது . பின்பு டைனிங் ஹாலில் 30 கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாராக இருந்தன
காலை உணவருந்திய பின் அனைவரும் சிறிய ஓய்வு எடுத்து பின் போடிங் சிலர் சென்றனர்
சதுப்பு நில பகுதியில் போட் பயணம் செய்வது மிகவும் அருமையான அனுபவம்
பின்பு மதிய உணவு அதுவும் buffet உணவு வகைகள் பூவார் ரிசார்ட்டில் சமையல் வல்லுனர்கள் மிகவும் அருமையாக செய்து இருந்தனர் பின்பு சிறிய ஓய்விற்கு பின் மாலை
No comments:
Post a Comment